டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இது 8வது போட்டியாகும். இதில் சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றது. குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும்இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2ல் பாகிஸ்தான் –இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறி அரையிறுதியில் இங்கிலாந்துடன் போட்டியிடும். இந்திய அணி தோல்வியடைந்தால் குரூப் 2ல் இரண்டாவது இடத்திற்கு சரிந்து நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலில் ரோகித் ஷர்மாவும் , கே.எல். ராகுலும் களம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் எடுத்து ரோகித் வெளியேறினார். இருவரும்சேர்ந்து ஒரு ஒவரில் 27 ரன்கள் எடுத்திருந்தனர். ரோகித்ஷர்மா வெளியேறியதால்அடுத்த ஆட்டக்காரராக விராட் கோலி களம் இறங்கி ஆடி வருகின்றார்.