சூப்பர் நியூஸ்…! 9,800-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…! இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு…!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Mail Motor Service Group A, Postal Services Group ‘B’, Assistant Superintendent of Posts, Mail Motor Service உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 9,800-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

விண்ணப்பதாரர் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://wp-content/uploads/2022/08/India-Post-Office-Recruitment-2022.pdf

Vignesh

Next Post

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்..!! ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.12 உயர்வு..!! - ஆவின் நிறுவனம்

Fri Nov 4 , 2022
தமிழகத்தில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.  அதன்படி, அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24-இல் இருந்து 30ஆக உயரும் என்றும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுகட்ட இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஆவின் நிறுவனம் […]

You May Like