இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
IOB வங்கியில் Office Assistant, Faculty & Attender பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.20,000 வரை சம்பளம் வழங்கப்படும். பதிவாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 09.11.2022 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
For More Info: https://www.iob.in/upload/CEDocuments/online_advertisement_career.pdf