இதனால் தான் சானியா மிர்சா விவாகரத்து செய்கின்றாரா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா கணவரை எதற்காக விவாகரத்து செய்யப்போகின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியாமிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்  இருவரும் கடந்த 2010ம் ஆண்டு காதல்  திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பின்னர் துபாயில் வசித்து வருகின்றனர். சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றார். அதே நேரத்தில் இந்திய குடியுரிமையை சானியாமிர்சா விட்டுக்கொடுக்கவும் மறுத்தார். இவர்களுக்கு 4 வயதில் மிர்சா என்ற மகன் உள்ளார்.

மகிழ்ச்சியாக இருந்த இந்த ஜோடிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட தகவல்படி மறைமுகமாக ஏதோ கூற வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ’’உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன அல்லாஹ்வை கண்டுபிடிக்க’’ என்று எழுதி உள்ளார்.

உண்மையிலேயே அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் பாகிஸ்தான் ஊடக அறிக்கையில், சோயிப் மாலிக்’ தொலைக்காட்சியின் போது சானியாவை ஏமாற்றிவிட்டார் என்று தகவல் வெளியிட்டுள்ளன.  

பல மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன. மகனை பார்க்க மட்டும் அடிக்கடி சந்திப்பு நடப்பதாக தெரிவித்துள்ளனர். சமீப காலமாக நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து என்று வந்து நிற்பது ரசிகர்களை அதிர்ச்சிகொள்ளச் செய்கின்றது.

நட்சத்திர ஜோடியான தனுஷ் –ஐஸ்வர்யா முதலில் விவாகரத்து கேட்டு வந்தனர். பின்னர் பரஸ்பர புரிதலில் மீண்டும் சேர்ந்துவிட்டனர். இதேபோல நடிகை சமந்தா-சைதன்யா இடையேயும் மேஜிக் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இந்நிலையில் இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு என்ன ஆனது என தெரியாமல் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். எனினும் இது பற்றி சம்மந்தப்பட்ட இருவரும் எதுவும் கூறவில்லை.

Next Post

ரத்தத்தை கூட ஆய்வகத்தில் தயாரிக்கலாம்… நிரூபித்த பிரிட்டன்!!

Tue Nov 8 , 2022
பல உயிர்களைக் காப்பாற்றும் ரத்தத்தை இனி ஆய்வகத்தில் தயாரித்து அவசர காலத்திற்கு மனிதர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது பற்றிய செயல்முறை திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உள்ள எத்தனையோ கோடி பேர் சரியான நேரத்தில் உரிய ரத்தம் கிடைக்காமல் உயிரை மாய்க்கின்றனர். எத்தனையோ கோடி பேர் அரிய வகை குரூப் ரத்தத் தேவையால் […]
ஸ்மார்ட்போன் வாங்க 4ஆம் வகுப்பு சிறுமி செய்த அதிர்ச்சி செயல்..!! அதிர்ந்துபோன மருத்துவமனை..!!

You May Like