வீட்டின் கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிச்சது குத்தமா..? ரூ.19 லட்சம் அபராதம்..!! ஏன் தெரியுமா..?

சொந்த வீட்டின் கதவுக்கு தனக்கு பிடித்த கலரில் பெயின்ட் அடித்ததற்காக உரிமையாளருக்கு 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பெர்கில் உள்ள வீட்டு உரிமையாளருக்கு நடந்திருக்கிறது.

ஈடின்பெர்கின் நியூ டவுனில் உள்ள டிரம்மண்ட் பகுதியில் இருக்கிறது மிராண்டா டிக்சன் (48) என்ற பெண்ணின் பரம்பரை வீடு. 1981ஆம் ஆண்டு டிக்சனின் பெற்றோர் அந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். அவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு கடந்த 18 மாதங்களாக பார்த்து பார்த்து அந்த வீட்டை மிராண்டா டிக்சன் புணரமைத்துள்ளார். ஆனால், வீட்டை புணரமைத்த மகிழ்ச்சி அவருக்கு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. ஏனெனில், அடையாளம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு ஈடின்பெர்க் சிட்டி கவுன்சிலிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஈடின்பெர்க் நகரத்திற்கென பாரம்பரிய நெறிமுறைகளை மீறி பிங்க் நிறத்தில் வீட்டின் கதவுக்கு பெயிண்ட் அடித்திருக்கிறாராம் மிராண்டா டிக்சன்.

வீட்டின் கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிச்சது குத்தமா..? ரூ.19 லட்சம் அபராதம்..!! ஏன் தெரியுமா..?

இது தொடர்பாக BBCயிடம் பேசியுள்ள மிராண்டா டிக்சன். “இந்த நோட்டீசால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அமலாக்கப் பிரிவின் அறிவிப்பின்படி என் வீட்டு கதவுக்கு அடர் நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டுமாம். ஏனெனில், பிரைட் பிங்க் கலரில் பெயிண்ட் அடித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அது லைட் பிங்க்கில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கேலிக்குறியதாக இருக்கிறது. இதில், அபத்தமான விஷயம் என்னவென்றால், அதேப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளின் கதவுகளில் அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட் பற்றி கவுன்சிலிடம் கேட்டபோது, அதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருக்கிறார்கள்.

வீட்டின் கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிச்சது குத்தமா..? ரூ.19 லட்சம் அபராதம்..!! ஏன் தெரியுமா..?

ஆனால், முன்பே விண்ணப்பித்து அனுமதி வாங்காததால் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. கதவுக்கு வேறு பெயிண்ட் அடிக்க வேண்டுமென்றால் மீண்டும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்த பெயிண்ட் காய்வதற்கு நாள் முழுவதும் என் வீடு திறந்தே இருக்க வேண்டும். மீண்டும் மாற்றியமைப்பதெல்லாம் அத்தனை சுலபமானதல்ல.” என மிராண்டா டிக்சன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

வீட்டின் கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிச்சது குத்தமா..? ரூ.19 லட்சம் அபராதம்..!! ஏன் தெரியுமா..?

இருப்பினும் உலக பாரம்பரிய பகுதியாக இருக்கும் நியூ டவுனிற்கென இருக்கும் சில விதிகளை மீறியுள்ளதால் மிராண்டாவிற்கு 20,000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மிராண்டாவின் வீட்டு கதவு மற்றும் அவரது வீட்டின் உட்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Chella

Next Post

சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் போது துடிதுடித்து உயிரிழந்த பக்தர்.!

Tue Nov 1 , 2022
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடியில் பகுதியில் ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி என்ற கோவில் அமைந்து இருக்கின்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நிகழ்ந்து வந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஆய்க்குடியில் உள்ள சிவன் கோவின் திடலில் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளித்து , சூரபத்மன் உள்ளிட்ட சூரர்களை வதம் செய்தார். இந்நிகழ்ச்சியில், […]

You May Like