’இது வெறும் ட்ரெய்லர்தான்’..!! 2 லாரிகளில் ஆவணங்கள்..!! ஷாக்கான தேர்தல் ஆணையம்..!! தாக்கிய உத்தவ்..!!

தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க, உத்தவ் தாக்கரே அணியினர் 2 லாரிகளில் பிரமாணப் பத்திரங்களை எடுத்துச் சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. மேலும், உத்தவ் தாக்கரே – ஷிண்டே அணிக்கு தனித்தனி பெயர், சின்னத்தை வழங்கியது. அத்துடன், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அணியினர் இரண்டு லாரிகளில் பிரமாணப் பத்திரங்கள், ஆவணங்களை கொண்டு சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

’இது வெறும் ட்ரெய்லர்தான்’..!! 2 லாரிகளில் ஆவணங்கள்..!! ஷாக்கான தேர்தல் ஆணையம்..!! தாக்கிய உத்தவ்..!!

இதுகுறித்து, தேர்தல் ஆணைய விவகாரங்களை கவனித்து வரும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் அனில் தேசாய் கூறுகையில், “கட்சியினர் சுமார் 11 லட்சம் உறுப்பினர் படிவங்களை சேகரித்தனர். ஆனால் இந்த படிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே, 8.5 லட்சம் உறுப்பினர் படிவங்களையும், 2.62 லட்சம் நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்துள்ளோம். மேலும், சில மாவட்டங்களுக்கான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.

Chella

Next Post

ஆந்திராவில் 40 குரங்குகள் உயிரிழப்பு...

Wed Oct 26 , 2022
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் சுமார் 40 குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யாரோ விஷம் வைத்து இந்த நாச வேலையை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அடர்ந்த புதருக்குள் இறந்த நிலையில் குரங்குகளின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயங்கிய நிலையிலும் சில குரங்குகள் இருந்துள்ளன. அதனை காக்கும் நோக்கில் உள்ளூர் மக்கள் அதற்கு உணவு கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் […]
குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஆசிரியர்..!! 500 அடி பள்ளத்திலிருந்து சடலமாக மீட்பு..!!

You May Like