கொரோனா நிவாரண நிதிக்காக தன்னுடைய இளம் வயதில் எடுக்கப்பட்ட நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடுகிறார் பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன்.
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டு வர அனைத்து நாடுகளும் நிதிதிரட்டி வருகின்றன. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் அனிஸ்டன் தனது பழைய புகைப்படத்தை ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார். பிரபல தொடரான பிரண்ட்ஸ் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜெனிபர் அனிஸ்டன்.
தற்போது 51 வயதைக் கடந்திருக்கும் இவர் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் பலமுறை இடம்பிடித்துள்ளார். 1995ஆம் ஆண்டு பிரபல புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர் இவரை நிர்வாணமாக படமெடுத்துள்ளார். இந்தப் படம் தான் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது. இதனுடன் செலிகர் எடுத்த 25 படங்களும் ஏலத்திற்கு வருகிறது. இதுகுறித்த தகவலை விடியோவுடன் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் அனிஸ்டன் வெளியிட்டுள்ளார்.
ஏலத்தில் கிடைக்கும் தொகை, என்.ஏ.எஃப். கிளினிக்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். அந்த அறக்கட்டளை கொரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இலவசப் பரிசோதனைக்கும் இந்த நிதியைச் செலவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.