தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!

டைரக்டர் (பொறியாளர்) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.10.2022 க்குள் (திங்கள் கிழமை கடைசி நாள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டைரக்டர் (பொறியாளர்) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 58 என்றும் அதிகபட்ச வயதானது 62 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் பேசிஸ் அல்லது கான்ட்ராக்ட் பேசிஸ் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தமிழக அரசு பணிக்கு என அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Next Post

HCL வேலை : பிளஸ் டூ முடித்தவர்களுக்கு சரியான வாய்ப்பு!!

Sun Oct 30 , 2022
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு […]

You May Like