கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாடிய கவிஞர் வைரமுத்து, “2022-ல் இந்தி எதிர்ப்பு பற்றி தமிழர்களிடம் கூடுதல் எழுச்சி ஏற்பட வேண்டும். இது கடந்த 1965 விட வலுவானதாக இருக்க வேண்டும். சமீப காலமாக பல இடங்களில் இந்தி மொழி திணிப்பு நடைபெற்று வருகிறது.
அத்துடன் இந்தி மொழி தெரியாதவர்கள் மத்திய அரசுடைய பணிகளில் சேரவே முடியாது எனும் நிலையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். பயிற்சி மொழியாக இந்தியை கொண்டு வந்து நம்மிடமிருந்து ஆங்கிலத்தை அகற்ற முயற்சிக்கின்றனர்.
நாம் வசதியுடனும், குறைவில்லா வாழ்க்கையுடனும் இருக்க தமிழும் ஆங்கிலமும் தெரிந்தால் மட்டும் போதும். இந்தி அவசியம் இல்லை.” என்று பேசியுள்ளார்.