ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருக்கும் நிலையில் அவரது மகள் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்கின்றார்.
பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலுபிரசாத் யாதவ் உள்ளார். அவர்களுக்கு சிறு நீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து சிறுநீரக மாற்றம் செய்ய வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன் வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எப்போது அறுவை சிகிச்சை என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.
பீகார் மாநிலத்தில் பிரபலமான அரசியல்வாதி லாலு பிரபலமான அரசியல்வாதியான லாலு பிரசாத் யாதவ், லாஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராவர். இவர் பீகார்மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார். பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.என். கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்துள்ளார். அரசியல் அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
பீகார் கால்நடை கால்நடை கல்லூரியில் எழுத்தாளராக பணியாற்றினார். அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக இருந்தார் லாலு ராப்ரி அவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதி்க்கு 2 மன்கள் 7 மகள்கள் என 9 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் உள்ளன. எனினும் கால்நடைத் தீவன வழக்கு இவருக்கு எதிராக திரும்பி சிறைக்கு செல்ல வைத்தது. பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.