உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என குடிமக்களுக்கு இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், கிடைக்கக்கூடிய வழிகளில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடி மக்களுக்கு புதிய ஆலோசனையை வழங்கியது. அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து சில இந்தியர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று ஆலோசனை மேலும் கூறியது.
இது குறித்து இந்திய தூதரகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கடந்த வாரம் தூதரகம் வழங்கிய ஆலோசனையின் தொடர்ச்சியாக, உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சில இந்திய குடிமக்கள் ஏற்கனவே உக்ரைனை விட்டுச் சென்றுள்ளனர்” என்று உக்ரைன் தலைநகரில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.