
தமிழகத்தில் கொரேனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கினை நீடிப்பது குறித்து மருத்துவக்குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவினை அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே 5 முறை முதலமைச்சரை சந்தித்து விவாதித்தப்பிறகு ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இன்று மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கினை நீடிப்பதா? அல்லது தளர்வுகளுடன் அளிப்பது தொடர்பாக இன்று மருத்துவக்குழுவுடன் நடத்தும் ஆலோசனைக்கு பின்பாக முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.