ஆந்திராவில் ‘மன பாடி நாடு-நேடு’ என்ற ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் திட்டத்தின் மூலம் பல அரசு நிறுவனங்களும் புதுபிக்கப்பட்டு வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கொண்டுவந்த திட்டம் ‘மன பாடி நாடு-நேடு’. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,715 அரசு நிறுவனங்கள் மூன்று வருடங்களுக்குள் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்பது வகையான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடர்ப்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில்,
ஓடும் நீருடன் சுத்தமான கழிப்பறை
சுத்தமாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்
மின்சார பழுது சரி செய்தல்
மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்குதல்
பசுமை சாக்போர்ட்
பள்ளி சுவர்களில் ஓவியம்
ஆங்கில ஆய்வகம்
கூட்டு சுவர் திட்டம்
பழுது பார்க்கும் மையம்
போன்ற வசதிகளை ஏற்ப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.