சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவரை அதன் பின் வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் அதிர்ச்சி அடைந்த கோபி மற்றும் சிறுமி இருவரும் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்தனர்.
இதை அறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இருவருமே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.