தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சங்கர் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் முதல்வன் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ரகுவரன்.
90களில் வெளியான இந்த திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வசூலை வாரி குவித்தது. மேலும் கதாநாயகன் மற்றும் வில்லன் உள்ளிட்டோருக்கிடையில் காம்பினேஷன் படுஜோராக இருந்தது.
மக்களால் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த இந்த திரைப்படத்தில் ரகுவரன், மணிவண்ணன், மனிஷா கொய்ராலா, வடிவேலு போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் அதிலும் குறிப்பாக கதாநாயகன் வில்லன் காம்பினேஷன் மிகவும் சிறப்பாக இருந்தது.
இந்த சூழ்நிலையில், மாபெரும் வெற்றி படமாக அமைந்த இந்த திரைப்படம் உலக அளவில் 46 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீசை திக்கு முக்காட வைத்தது. அதோடு, இந்தியாவில் ரூபாய் 38 கோடியும், ரூபாய் 8 கோடியும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது