நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பிலிப்பாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயி( 63) இவருடைய கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வீட்டில் தனியாக வாழ்ந்திருக்கிறார் இவருடைய மகன் மணி என்கின்ற கனகராஜ் (39) இன்றைய மகன் அபுதாவியில் வேலை பார்த்து வருகின்றார். தற்சமயம் அந்த மூதாட்டியின் வீட்டில் எலக்ட்ரீசியன் பணி நடந்து வருகின்ற நிலையில், அதற்காக வீட்டில் சுற்றுச்சூழல் துளையிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில்தான் சில மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தலையணையை வைத்து கொலை செய்துவிட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம், 2 சிலிண்டர் மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
வழக்கம் போல விடிந்தவுடன் எழுந்து அந்த மூதாட்டி வேலையை பார்க்க தொடங்கி விடுவார். ஆனால் இன்று நீண்ட நேரம் ஆன பின்னரும் வீட்டிலிருந்து மூதாட்டி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது மூதாட்டி படுக்கை அறையில் இருந்தபடியே உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.
ஆகவே மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆயுள் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வேலை பார்த்து வந்த மேஸ்திரி, எலக்ட்ரிசியன் போன்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் தொடர்பாக இதுவரையில் எந்த விதமான தகவலும் கிடைக்காத நிலையில், ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிர தேர்தலில் காவல்துறையினர் இறங்கி வருகின்றனர்.உயிரிழந்த மூதாட்டி பாவாயி நாமக்கல் மாவட்ட பாஜகவின் தலைவர் சத்யமூர்த்தியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது