கணவன் மனைவி தற்கொலை – ஒரே சேலையில்  தூக்கில் தொங்கிய பரிதாபம்! காரணம் என்ன ?

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கணவனும் மனைவியும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சார்ந்தவர்  திருப்பதி வயது 51. இவரது மனைவி பெயர் தீபா(42). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். மகன் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் சொந்த ஊரில் கணவன் மற்றும் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர்.  இவர் சென்னையில் உள்ள  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்  டிரைவராக வேலை செய்து  வந்தார். சமீபத்தில் தான் இவரது மகளுக்கு திருமணம் முடிந்தது. கடந்த வாரம்  மகளுக்கு தாலி பெருக்கு விழா நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம்  வரை  இவர்களது வீட்டுக் கதவு  திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த  சுற்றத்தினர்  வீட்டு கதவை தட்டி பார்த்திருக்கின்றனர். கணவன் மனைவி இருவருமே கதவை திறக்கவில்லை. மேலும் செல்போனின் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். அதற்கும் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து  பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சோழவந்தான் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அவர்களின்  இறப்பிற்கான காரணம் குறித்து உறவினர்களிடமும் அருகில் வசித்து வருபவர்களிடமும் விசாரித்தனர். கணவன் மனைவி இருவரும் எதற்காக திடீரென தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கடன் தொல்லை ஏதாவது இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா  எனக்கு காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. மேலும் இந்த விசாரணையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் காவல்துறையினர் கிராம நிர்வாக அதிகாரி சிவராமன் முன்னிலையில் விசாரணையை நடத்தினர். அதில் தனது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை  உரிய நேரத்தில் செலுத்த முடியாததால் இவர்கள் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என அவர்களது உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

Baskar

Next Post

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டி பிடித்தும்... துப்பாக்கியுடனும் வலம் வந்த இளைஞர்கள் - கைது செய்த போலீசுக்கு அதிர்ச்சி!

Wed Feb 8 , 2023
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில்  துப்பாக்கியுடன் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன்  பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வீடியோவில் இருந்த இரண்டு இளைஞர்களையும்  தேடிவந்தனர். அவர்களின்  வாகன […]

You May Like