அடுத்த வாரம் பூமியின் வளிமண்டலத்தை தாக்க உள்ள மிகப்பெரிய விண்கல்.. பூமிக்கு ஆபத்தா..?

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. அவை கிரகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இன்னும் சில நாட்களில், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நுழைய உள்ள ஒரு மாபெரும் விண்கல்லை நாசாவின் நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். 199145 (2005 YY128) என பெயரிடப்பட்ட விண்கல், 1 கிலோமீட்டர் அகலம் கொண்டது.. மேலும் இது பூமிக்கு அருகில் உள்ள பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் பூமியின் சுற்றுப்பாதையில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கல் 1,870 முதல் 4,265 அடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடந்து சென்ற விண்கற்கள் மற்றும் எதிர்காலத்தில் பூமியை கடக்க உள்ள 35,000 விண்கற்களில், பூமியை மிக அருகில் இருந்து கடந்து செல்லும் 4-வது விண்கல் இதுவாகும்.

இந்த மிகப்பெரிய விண்கல், பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.. மேலும் இந்த விண்கல், பூமியின் சுற்றுப்பாதையில் விழுந்து உண்மையான சேதத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கவில்லை..

Maha

Next Post

சீரம் நிறுவனத்தின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 2டோஸ் ரூ.2,000..! எப்போது கிடைக்கும்?

Fri Feb 10 , 2023
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதானமானதாக இருக்கின்றன. இவற்றுள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (cervical cancer) ஏற்படுத்தும் Human papillomavirus-க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் அதன் உற்பத்தியை இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம். இந்நிலையில் சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி, செர்வாவாக்(HPV), இரண்டு டோஸ் ரூ.2,000-க்கு, […]

You May Like