வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விரைவு பேருந்துகளும் தாம்பரம் வழியாக கோயம்பேடு செல்ல வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் விரைவு பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும்.
இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவார்கள்.. மேலும் நமது கழகத்தின் வருவாயும் அதிகரிக்கும்.. மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..