அதிரடி… மொத்தம் 2,760 ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு…! தமிழக அரசு அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது ‌.

தமிழகத்தில் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு 200 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு, 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.

பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த உத்தரவானது மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Vignesh

Next Post

"என்னடா முறைக்கிற.?" சினிமா பாணியில் வம்பிழுத்து அடித்துக் கொன்ற கொடூரம்.!

Tue Oct 25 , 2022
மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மும்பையின் மாடுங்கா நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை தன் அணிந்திருந்த பெல்ட் கொண்டு அடுத்து, தலையில் சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த […]

You May Like