fbpx

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இது தொடர்பாக […]

தமிழ் புத்தாண்டான நேற்றைய தினம் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை போலவே ஊழல் பட்டியலையும் வெளியிட்டார் அதேபோல அவர் அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிட்டுள்ளார். அந்த பில்லில் ஜிஎஸ்டி வரியோடு சேர்ந்து 3,46,530 என்று பதிவாகி உள்ளது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை எனக்கு சற்றேற குறைய […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC ஜூனியர் இன்ஜினியர், பப்ளிக் பிராசிகியூட்டர், ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 27. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆயுஷ் அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய புலனாய்வுப் பணியகம், ஊழியர்களின் […]

நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் 11,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது என்பது வேறு, மூடநம்பிக்கை இருப்பது என்பது வேறு இவை இரண்டையும் சரியாகப் பிரித்து யாரும் பார்ப்பதில்லை. அதன் காரணமாகத்தான் கடவுள் நம்பிக்கைகளை கூட மூடநம்பிக்கை என்று ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள். கடவுளை வணங்குவது, சில சம்பிரதாயங்களை செய்வது என்பது அவரவர் மன நிம்மதிக்காக செய்வதுதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படி அவர்கள் செய்யும் சடங்குகளால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாசுடன் திருப்பூரில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மகன் சுபாஷ் அனுஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளார். ஆனால், சுபாஷ் காதலை கைவிடவில்லை. […]

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் மிகப்பெரிய அதிருப்த்தியில் இருந்தனர். அதன் விளைவாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வி 10 ஆண்டுகள் நீடித்தது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் 2011 ஆம் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]

அந்தமானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பாக வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஒரே நாளில் 4 முறையும், அடுத்த நாள் 3 முறை என தொடர்ச்சியாக 7 நிலநடுக்கம் ஏற்பட்டது. […]