பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 என்றும், அதன் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அதற்குள் ஆதார் எண் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடைசி வாய்ப்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண்கள் செயலிழக்கும் என்றும் அதனால் வங்கிக் கணக்குகள் உள்பட பல விஷயங்கள் முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை அடுத்து இதுவரை பான் – ஆதார் எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.