இன்றைய நிலவரப்படி (15.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.79.96 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.72.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து ஒரு வாரமாக அதிகரித்து கொண்டே வருகிறது. சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமையை எண்ணை நிறுவனங்கள் நுகர்வோர் மீது சுமத்துவது வருத்தம் அளிகிறது.
இன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.79.53 லிருந்து 43 காசுகள் உயர்ந்து ரூ.79.96 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.72.18 லிருந்து 51 காசுகள் உயர்ந்து ரூ.72.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பாமர மக்களுக்கு மீண்டும் ஒரு ஊரடங்கு வாழ்க்கையாக அமைகிறது.