பிரேசிலில் பெண் ஒருவர் கர்பிணி போல நடித்து வயிற்றில் போதை பொருட்களை கடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து இருப்பதாக காவல்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கர்ப்பிணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்ததில் அவர் கர்ப்பிணி அல்ல என்றும் அவரது வயிற்றில் தர்பூசணி மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
தர்பூசணியை கைப்பற்றிய போலீசார் அதனை பிரித்து பார்த்ததில் நான்கு பவுண்ட்க்கும் அதிக மதிப்புடைய போதை பொருட்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அந்த போதை பொருட்களை Paraguay என்ற இடத்தில் இருந்து Riode Janerio என்ற இடத்திற்கு வெறும் 100 டாலருக்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.