புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா சூரக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன் (44). இவர் அதே பகுதியைச் சார்ந்த மகாலட்சுமி (34) என்ற பெண்ணை பல வருடமாக காதலித்து இருந்திருக்கிறார் ஆகவே மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகனிடம் பலமுறை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
அத்துடன் இது குறித்து கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாக்குவாதத்தில் ஆத்திரம் கொண்ட மோகன் மகாலட்சுமியை கத்தி மற்றும் கட்டை உள்ளிட்டால் கடுமையாக தாக்கி இருக்கிறார், இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆகவே இது குறித்து கறம்பக்குடி காவல் துறையினர் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் அதோடு மோகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கு குறித்த விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது இதனையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணை முழுவதுமாக முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று வழக்கில் நீதிபதி சத்யா குற்றம் சுமத்தப்பட்ட மோகனுக்கு ஆய்வு தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.