வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து வரும் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு நேரத்தில் தொடங்கிய இந்த கனமழை இன்று காலை வரை விடாமல் பெய்து வருகிறது.
இதனால், சென்னையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்துகின்ற முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு அருகே பிரகாஷ் ராவ் காலனியில் சாந்தி என்ற பெண் வசித்து வந்துள்ளார்.
கனமழையின் காரணமாக அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீட்டில் கோலம் போடுவதற்காக காலையில் வாசலுக்கு சென்றுள்ளார். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியாகி இருக்கிறார்.
இது குறித்து போலீசார் தகவல் அறிந்து அப்பகுதியில் மீட்பு பணியை துவங்கியுள்ளனர். நேற்று இரவு வியாசர்பாடி பகுதியில் ஆட்டோ டிரைவரான தேவராஜ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் மழையினால் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இரு நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான முறையில் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.