அரக்கோணம் : ரயில் நிலைய ஓய்வறை.. பிரசவ அறையாக மாறிய சம்பவம்.!

ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அஸ்வின் குமார் என்பவர் திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான சாந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டு, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளளனர்.

ரயில் அரக்கோணம் வந்த நிலையில், சாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த, அஸ்வின் குமார் ரயிலில் இருந்து கீழே இறங்கி சாந்தினியை அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் இருவரும் உள்ளனர். ரயில் நிலைய ஓய்வறை பிரசவ அறையாக மாறிய சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Baskar

Next Post

’யாரு அடிபட்டு கிடந்தா என்ன.. நமக்கு வீடியோ தான் முக்கியம்’..!! ’உயிருக்கு போராடிய சிறுமி.. உதவ முன்வராத அவலம்’..!!

Tue Oct 25 , 2022
ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், சிறுமி ஒருவர் உதவி கேட்டும், அவரை மீட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் மனிதாபிமானம் இன்றி செல்போன்களில் வீடியோ எடுத்த அவலம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், பலத்த காயங்களுடன் அந்த சிறுமி அடிபட்டு கிடந்தது தெரியவந்தது. தலை […]
’சிறுமியின் உள்ளாடையை கழற்ற சொல்வதும் கற்பழிப்புக்கு சமம் தான்’..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like