ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அஸ்வின் குமார் என்பவர் திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான சாந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டு, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளளனர்.
ரயில் அரக்கோணம் வந்த நிலையில், சாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த, அஸ்வின் குமார் ரயிலில் இருந்து கீழே இறங்கி சாந்தினியை அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்கு சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் இருவரும் உள்ளனர். ரயில் நிலைய ஓய்வறை பிரசவ அறையாக மாறிய சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.