திருமண விருந்தில் ரசகுல்லாவுக்கு அடிதடி.. பறிபோன ஒரு உயிர்.. அலட்சியத்தில் போலீஸ்.!

உத்தர பிரதேசம் அருகே ஆக்ராவை அடுத்த மொஹல்லா ஷைக்கான் பகுதியில் உஸ்மான் என்பவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடந்தி இருக்கிறார்.பந்தியில் வைப்பதற்காக இருக்கும் ரசகுல்லா தீர்ந்ததை தொடர்ந்து மணமகள், மணமகன் ஆகிய இரு தரப்பினரிடையே வாய்த்தகராக மற்றும் கைகலப்பாக முடிந்திருக்கின்றது.

இதில் நடந்த தகராறில் சன்னி என்ற 22 வயது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஆக்ராவின் சரோஜினி நாய்டு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியிருக்கின்றனர்.சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை பலனின்றி சன்னி பரிதாபமாக உயிர் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி கல்யாண வீட்டில் நடந்த தகராறில் ஐவருக்கு மேலும் காயம் ஏற்பட்ட நிலையில், அருகே இருந்த சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விசாரணையில் ஈடுபட்ட காவல் அதிகாரி எத்மத்புர் வட்டார ரவிக்குமார் குப்தா தகவல் கொடுத்திருக்கிறார்.

அதில் இறந்த அந்த நபரின் சார்பில் இருந்து எந்த புகார் இதுவரை கொடுக்கப்படாத நிலையில், எவரும் கைது செய்யப்படவில்லை என அறியப்படுகிறது. மேலு‌ம், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஏதேனும் புகார் கொடுக்கப்பட்டால் அதுபற்றி விசாரிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

Baskar

Next Post

ஒரே இடத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பலி.. திருவிழாவில் அரங்கேறிய கொடூர மரணங்கள்.!

Sun Oct 30 , 2022
தென்கொரியா நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்த நிலையில், கட்டுப்பாடின்றி கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் உள்பட 149-க்கும் அதிகமான நபர்கள் பலியான சம்பவம் அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலருக்கு காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாறுவேடங்களில் உடை அணிந்து வலம் வரும் திருவிழா தென்கொரியாவின் இதோவன் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் கடைசி தேதியில் நடைபெறும். ஹாலோவீன் என்று கூறப்படும் இந்த திருவிழாவில் […]

You May Like