வகுப்பறையிலேயே மாரடைப்பு.. கதறிய மாணவிகள்.. துடிதுடித்து போன உயிர்.!

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரவணன்(42 வயது) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் , வழக்கம் போல் நேற்று காலை சரவணன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவிகளுக்கு கணித வகுப்பும் எடுத்து கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி வகுப்பிலேயே கீழே விழுந்தார்.

இதனை கண்டு அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர்கள், சரவணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது, சரவணனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறினார். இந்த செய்தி அங்குள்ள அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...? வெளியான விவரம்...

Thu Nov 10 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,016 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் […]
இந்தியாவில் புதிய கொரோனா அலை உருவாகிறதா..? ’தப்பிக்கவே முடியாது’..!! ’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!!

You May Like