மாந்திரீகவாதி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், 25 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, அந்த குடும்பத்திற்கு சஞ்சய் சர்மா என்பவர் மாந்திரீகவாதி எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்த குடும்பத்திற்கு சில மாந்திரீக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் தனியாக இருந்த போது, வீட்டிற்கு வந்த மாந்திரீகவாதி சஞ்சய், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த செயலை வீடியோ எடுத்த சஞ்சய், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளான். பின்னர், அந்த பெண்ணை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து மயக்க மருந்து கொடுத்து வேறு சிலருடன் அந்த பெண்ணை பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளான்.

இந்நிலையில், மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி அந்த பெண்ணை சஞ்சய் சர்மா காவல் நிலையத்திற்கு வெளியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடந்த 7ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணுக்கு மயக்க மருத்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் சர்மா மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.