பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரையும், அரசுப் பள்ளிகளின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 9ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால், காலாண்டு தேர்வு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளை, பள்ளிகளே நிர்ணயித்துள்ளன.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் பலவற்றில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த சில பள்ளிகள், தாங்களும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்விக்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அதற்கு, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். மற்ற வகுப்புகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இன்றி வகுப்புகளை நடத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.