துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த அதிதீவிர நிலநடுகத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உதவி மற்றும் வழங்க தயாராக உள்ளோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அதிதீவிர நிலநடுக்கத்தால் 1,300க்கும் மேற்பட்டோர் பலி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், துருக்கியில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், சிரியாவிலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அங்கு 6.7 ரிக்டர் அளவு மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தநிலையில்,உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உதவி மற்றும் வழங்க தயாராக உள்ளோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில், துருக்கி மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது என்றும், இந்த துயர சம்பவத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள், மருத்துவக்குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் அனுப்பப்படும் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.