முட்டாள்தனமான பரிகார யோசனை..!! சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்..!! வெளியான பகீர் காரணம்..!!

மாந்தீரிகரின் முட்டாள்தனமான பரிகார யோசனையை கேட்டு, இளம் சிறுமியை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் பிஷ்னுபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு வயது 37. இந்நிலையில், அந்த ஆசிரியர், தான் பணிபுரியும் பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அதாவது 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு சென்று தன்னுடைய பெற்றோர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக அந்த ஆசிரியரை கைது செய்தனர்.

முட்டாள்தனமான பரிகார யோசனை..!! சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்..!! வெளியான பகீர் காரணம்..!!

ஆசிரியரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 37 வயதாகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணத் தடை இருப்பதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதற்காக, கோவில் பரிகாரம் என்று சுற்றி வந்த ஆசிரியர் மாந்திரீகர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த மாந்திரீகர் ஆசிரியரிடம் திருமணத் தடை நீங்க இளம்பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் கொண்டு வருமாறும், அவ்வாறு கொண்டு வந்தால் அதை வைத்து செய்யும் பூஜையால் திருமணத் தடை நீங்கும் என்றும் மோசமான யோசனையை கூறியுள்ளார். இதனைக் கேட்டுக்கொண்ட அந்த ஆசிரியர், தான் பணியாற்றிய பள்ளியிலே படித்து வந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

முட்டாள்தனமான பரிகார யோசனை..!! சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்..!! வெளியான பகீர் காரணம்..!!

இதைக் கேட்ட போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த ஆசிரியர் மட்டுமின்றி ஆசிரியருக்கு விபரீத யோசனை அளித்த அந்த மாந்திரீகர், ஆசிரியரின் ஆலோசகர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மாந்தீரிகரின் முட்டாள்தனமான பரிகார யோசனையை கேட்டு, இளம் சிறுமியை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆசிரியருக்கும், அந்த மாந்திரீகருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Chella

Next Post

’’வாழ்க்கையே பிரச்சனை, போராட்டம்’’… அந்தமான் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் சோகம்!!

Tue Nov 1 , 2022
அந்தமானில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் முக்கிய அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளம்பெண். தலித் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்த பெண் தன் 2 வயதில் அவரது தாயை பறிகொடுத்துள்ளார். அவரது தந்தை ஓவியராக இருந்துள்ளார். தாய் இறந்த சிறிது மாதங்களில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து […]

You May Like