பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் நிலையில், விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உலகில் எங்கிருந்து மலிவு விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அங்குதான் வாங்குவோம் என்றும் விரைவில் மலிவு விலையில் பெட்ரோல் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு லிட்டர் டீசல் விலையும் எந்த மாற்றமுமின்றி ரூ. 94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 265 நாட்களாக எந்த மாற்றமுமின்றி நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.