பெண்களுக்கு சூப்பர் திட்டம்..!! அதிக தொகை சேமிக்க இதை பண்ணுங்க..!! மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்குரிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்தார். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் பெண்களுக்கான சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்கள் தங்களது பெயரில் கூட அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டம் 7.5% நிலையான வட்டி விகிதத்தை வழங்கும்.

மிகக் குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையை சேமிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோள் என்று கூறப்படுகிறது. இதற்குரிய முதிர்வுகாலம் இரண்டு ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான புது சிறுசேமிப்பு வசதி 2023 -2025க்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும்.

Chella

Next Post

’அவரு என்னை கெடுத்துட்டாரு’..!! காதலனை போலீசில் சிக்க வைக்க பலே பிளான் போட்ட இளம்பெண்..!!

Sun Feb 5 , 2023
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. செங்கல்பட்டு காவல்நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில், சென்னை செல்வதற்காக காத்திருந்த போது, தன்னை நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் மிரட்டி கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கூட்டு பாலியல் பலாத்காரம் […]

You May Like