டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியது இந்தியா..!!

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 1 லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் 2லிருந்து அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை வீழ்த்தினால் போதும் என்ற சூழலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியது இந்தியா..!!

தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து இடையேயான போட்டி இன்று அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் மைபர்க், ஓடௌட் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் டாம் கூப்பர் மற்றும் ஆக்கர்மேன் அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டாம் கூப்பர் 19 பந்தில்35 ரன்களும், ஆக்கர்மேன் 26 பந்தில் 41 ரன்களும் அடிக்க, நெதர்லாந்து அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது.

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியது இந்தியா..!!

159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான வீரர்களான குயிண்டன் டி காக் (13), டெம்பா பவுமா (20), ரைலீ (25), மார்க்ரம் (17) மற்றும் டேவிட் மில்லர் (17), ஹென்ரிச் கிளாசன் (21) யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அனைவருமே கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 145 ரன்கள் அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, 5 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியது.

டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியது இந்தியா..!!

தென்னாப்பிரிக்கா வெளியேறியதால் 6 புள்ளிகளை பெற்றிருந்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. தலா 4 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் அடுத்த போட்டியில் மோதுகின்றன. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி குரூப் 2லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.

Chella

Next Post

#ராமநாதபுரம் : செயின் பறித்த கள்வனை.. கட்டிவைத்து தோலுரித்த கிராம மக்கள்.!

Sun Nov 6 , 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் பனைத்தொழிலாளி ராஜலட்சுமி(42).  வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த இருவர் ராஜலட்சுமி போட்டிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த குடும்பத்தினர் காரில் திருடர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 10 கிமீ தூரம் வரை துரத்தி சென்ற நிலையில், டூவீலரை போட்டு […]
அதிர்ச்சி..!! ’சாலை விபத்துகளில் அதிக மரணங்கள் நிகழ்வதற்கு இதுவே முக்கிய காரணம்’ - மத்திய அரசு

You May Like