இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. […]