கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு களையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம். கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம். வெயிலின் தாக்கத்தால் […]