ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ஷியாம் யாதவ், பணி முடிந்து தினமும் சக ஊழியர்களுடன் […]