கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆங்காங்கே உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் பல ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. […]