உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் டிராக்டர் டிராலி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது மிகவும் வேதனையானது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். […]

துர்க்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பால் சிக்கியவர்களை மீட்க இந்தியா சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படையுடன், தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் குழு துருக்கிக்கு இந்தியா அனுப்பி உள்ளது. துருக்கியில் நேற்று 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4,000 க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவின் 12 ஆண்டுகால உள்நாட்டுப் […]