உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுக்கடை ஒன்றை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்டோலி கிராமத்தில் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் அங்குள்ள கிராமவாசிகள்  மது அருந்துவது வழக்கம். இந்த மதுக்கடையில் அடிக்கடி தகராறுகள் நடப்பதும் உண்டு. இதனைத் தொடர்ந்து மது போதையில் ஏற்பட்ட தகராறில் அந்த கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர்  கொல்லப்பட்டார். […]