உதவிக்கு யாருமின்றி தனியாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நடுவீதியில் பிரசவித்த அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கருவுற்ற நிலையில் பெண் வந்துள்ளார். அவரை அனுமதிக்க மறுத்த நிர்வாகம் வெளியில் அனுப்பியுள்ளது. இதனால், வளாகத்தில் காத்திருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். அங்கிருந்த சிலர் தாங்கள் வைத்திருந்த போர்வையை திரை போன்று பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிரசவம் […]