ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில், இந்திய அணிதான் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத அணியாக இருந்தும், பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோற்று, கோப்பையை இழந்தது. இதன்மூலம், 2013-ல் இருந்து ஐசிசி கோப்பைக்கான கனவு நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பை தற்போது முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் ஜூன் […]

டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக பணிபுரிகிறார். இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் […]

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7ஆம் தேதி இந்திய அணி விளையாட உள்ள நிலையில் டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனி தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கிட்- ஸ்பான்சர் அடிடாஸ் நிறுவனம் இந்தி புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து 5 வருடங்கள் அடிடாஸ்தான் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் அமைக்கும் என தெரிகிறது. இதற்காக 350 […]

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அந்த அணியை ஒய்ட் வாஷ் செய்தது. இதனைத் தொடர்ந்து முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகின்றது. இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழி […]

வங்கதேச அணியுடனான போட்டியில் இருந்து ஜடேஜா விலகிக்கொண்டதை அடுத்து மாற்று வீரராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டி.20 உலக கோப்பை முடிந்த நிலையில் இந்திய அணி நியூநிலாந்துடன் முதல் கட்டத்தை முடித்துள்ளது. இதை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இது முடிந்த பின்னர் வங்கதேசத்துடன் விளையாடுகின்றது. அங்கு சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இத்தொடரில் ரவீந்திர […]

நியூசிலாந்து – இந்தியா மோதும் முதல் டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்குகின்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் […]

இங்கிலாந்து அணியின் சாம்கரனுக்கு  ஆட்ட நாயகன் விருது தட்டிச்சென்றார். இங்கிலாந்து அணியின் வீரர் சாம்கரன் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம்கரன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுவரை டி.20 12 சுற்று ஆட்டத்தில் சாம்கரன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. டி.20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 9 வீரர்கள் இவ்விருதுக்கு தேர்வு […]

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகுளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் முகமது ஹாரீஸ் 8 ரன்களும் ஷான் மசூத் 38 ரன்களும் இப்டிகார் அகமது […]

நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான டி20 உலக கோப்பை இறுதிச்சுற்று போட்டிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதும் டி.20 உலக கோப்பை போட்டி இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மழை வெளுத்து வாங்குகின்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றது. நாளை இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. மெல்போர்னில் மழை காரணமாக நாளை […]

இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்ற காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாதோல்வியடைந்தது. அடிலெய்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தோல்வியை தழுவியதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு இடத்தை காலி செய்தனர். இந்நிலையில் அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ரோகித் ஷர்மா தனியாக அழுது கொண்டிருந்தார். அவரை சமாதானப் படுத்த ராகுல்டிராவிட் சென்றார் என்ன கூறியும் கேட்காத ஷர்மா கண்கலங்கி […]