இன்றுடன் தமிழ் சினிமாவுக்கு 91 வயதாகின்றது!!

தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் ’காளிதாஸ்’ வெளியாகி இன்றுடன் 91 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இந்தப்படத்தை தற்போது பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தப்பட வைக்கின்றது.

தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ 1931ம் ஆண்டு அக்டோபர் 31ல் இதே நாளில் வெளியானது. 91 ஆண்டுகளை கடந்துவிட்ட இத்திரைப்படத்தை தயாரிக்க ரூ.8000 செலவாகியுள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனம் பெற்ற லாபம் ரூ.75,000 ஆகும். முதல் பேசும் படத்தில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது கூடுதல் தகவல்.

சினிமா என்றாலே அதில், காதல், பாடல், இசை, காமெடி என மசாலா தடவி மக்களுக்கு வழங்கப்படுவதால் வரவேற்பு அதிகமாகின்றது. 1931ல் வெளியான காளிதாஸ் திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வெளியான முதல் பேசும் படமும் கூட. இதன் முதல் காட்சி சினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய தொழில்நுட்பங்களை வைத்தே அற்புதமான படங்களை வழங்கியுள்ளது தமிழ் சினிமா.

கி.பி. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மகாகவி காளிதாஸ், சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றியவர் அவரை பற்றிய கதைதான் காளிதாஸ்.தமிழில் வெளியான முதல் படம் என பேசப்பட்டாலும் தெலுங்கு, இந்தி வசனங்களும் இடம்பெற்றுள்ளன. மூவிடோன் என்ற நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பி.ஜி.வெங்கடேசன் மற்றும் டி.பி.ராஜலட்சுமி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். எச்.எம்.ரெட்டி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

காளிதாஸ் திரைப்படத்தில் 50 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்களே ஆகும். இதில் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவார். இன்று கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து பல திரைப்படங்கள் இழப்பை சந்திக்கின்றன. ஆனால் முதன் முதலில் வெளியான இத்திரைப்படம் வெறும் ரூ.8,000 முதலீட்டில் ரூ75,000 லாபம்பார்த்தது அனைவரையுமே பிரம்மிப்படைய செய்யும்.

1930களில் பெரும்பாலான படங்கள் அழிந்துவிட்டன. காளிதாஸ் திரைப்படத்தையும் தற்போது யார் நினைத்தாலும் பார்க்க முடியாது. இதன் காப்பியோ பிரதியோ எங்கும் இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய தகவல். முதல் திரைப்படத்தை அடுத்த தலைமுறைக்காக சேமித்து வைக்கும் தொழில் நுட்பம் அன்று இல்லை. இதனால் அவை அழிந்துவிட்டன. இருந்தாலும் தமிழ் சினிமாவின் முயற்சி என்றும் கோலோச்சும்…

Next Post

சீரியலில் களமிறங்கும் பிரபல சன்நியூஸ் செய்திவாசிப்பாளர்!!

Mon Oct 31 , 2022
சன்நியூஸ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் பிரபலமாகி பிக்பாஸ் போட்டியாளராக அனைவரையும் ஈர்த்தவர் சீரியலில் களமிறங்க உள்ளாராம். சன்நியூஸ் பிரைம் டைம் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவரது உடை மற்றும் அலங்காரம், செய்தி வாசிப்பின் நலிணம் போன்றவற்றால் அனைவரையும் ஈர்த்தவர். பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். பின்னர் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் இருந்தார். எனினும் யூடியூப் ஒன்றை நடத்தி […]

You May Like