தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கையொப்பமிட நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது.
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்க உள்ள பொது மனுவில் கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சிகளை தி.மு.க கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல உள்ளார் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.