தமிழகத்தில் இன்றும் புதிய உச்சமாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் 16,000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,149 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,298ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 528 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,727-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 15,413 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.