தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கபட்ட 4 மாவட்டங்களிலும் 12 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து, கொரோனா தொற்று அதிகளவில் காணப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, 4 மாவட்டங்களிலும் டீ கடைகளுக்கு அனுமதிக்க இல்லை எனவும், உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைதொடர்ந்து, தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் அணைத்து பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 12 நாட்களுக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.