சென்னையில் செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் இன்று மின்தடை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
செம்பரம்பாக்கத்தில் பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம் பகுதிகளிலும், பொன்னேரியில் இருளிபட்டு, அழிஞ்சிவாக்கம், ஜகநாதபுரம், பெரியபாளையம் ரோடு, விருந்தவன் நகர், குதிரபல்லம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திருப்பூரில் இன்று நடைபெற இருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் அறிவித்துள்ளது.