திரிபுரா மாநில பகுதியில் துரை ஷிப் பாரி என்ற கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் ஏதோ ஒரு சடலம் கிடந்ததாக பொதுமக்கள் அந்த பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கமல்பூர் காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, அந்த வீட்டிற்கு அருகே இருந்த குழியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பிறகு மீண்டும் அந்த குழியை தோண்டினோம். அப்போது அதில் மேலும் 3 உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தது. அதில் கிடைத்த மொத்த சடலங்கள் 4ல் 3 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்கள் சுமிதா தேப்நாத் (வயது 32), பாதல் தேப்நாத் (வயது 70), சுபர்னா தேப்நாத் (வயது 10) மற்றும் ரேகா தேப் (வயது 42) என்று அடையாளம் காணப்பட்டுள்ளன . இந்த கொலைகளை செய்தது அதே குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தான் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.